249
திருகோணமலை, காலி, மாத்தறை மாவட்டங்களில் பிராந்திய சுனாமி ஒத்திகை பயிற்சி இன்று (04) புதன்கிழமை நடைபெறவுள்ளதாக பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக் ஷ நேற்று (03) பாராளுமன்றத்தில் அறிவித்தார். கரையோர மக்களதும், பாடசாலை மாணவர்களதும் தயார் நிலையை பரிசோதிப்பதற்காக இவ்வொத்திகை நடத்தப்படுகிறது.
இதற்கமைய,தேசிய மட்டத்திலிருந்து கிராமிய மட்டம் வரை சுனாமி ஆரம்ப ஆபத்து நிலையை எதிர்வுகூறும் பொறிமுறை மதிப்பீடு செய்யப்படுமென பிரதி சபாநாயகர் அறிவித்தார்.