149
45 கிலோ கிராம் வல்லப்பட்டையை காரில் கடத்திச் சென்ற ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவரை பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் நேற்று (01) கைது செய்துள்ளனர். பேருவளை ஹெட்டிமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
களுத்துறை வடக்கு கடற்கரை சந்தியில் காரை நிறுத்திய குற்றத்தடுப்புப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 45 கிலோ வல்லப்பட்டையை கண்டு பிடித்து காரைக் கைப்பற்றியதோடு குறித்த நபரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.