Thursday, May 2, 2024
Home » 45 Kg வல்லப்பட்டையுடன் வங்கி அதிகாரி ஒருவர் கைது

45 Kg வல்லப்பட்டையுடன் வங்கி அதிகாரி ஒருவர் கைது

பாணந்துறை பகுதியில் பொலிஸார் அதிரடி

by damith
October 2, 2023 8:00 am 0 comment

45 கிலோ கிராம் வல்லப்பட்டையை காரில் கடத்திச் சென்ற ஓய்வு பெற்ற வங்கி அதிகாரி ஒருவரை பாணந்துறை வலான மத்திய ஊழல் தடுப்பு பிரிவினர் நேற்று ​(01) கைது செய்துள்ளனர். பேருவளை ஹெட்டிமுல்ல பிரதேசத்தை சேர்ந்த 63 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

களுத்துறை வடக்கு கடற்கரை சந்தியில் காரை நிறுத்திய குற்றத்தடுப்புப் பிரிவின் பிரதான பொலிஸ் பரிசோதகர் உள்ளிட்ட அதிகாரிகள் குழு காரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 45 கிலோ வல்லப்பட்டையை கண்டு பிடித்து காரைக் கைப்பற்றியதோடு குறித்த நபரையும் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT