384
பாடசாலைகளுக்கு இடையிலான கால்பந்தாட்ட போட்டியில் ஏறாவூர் அலிகார் தேசிய பாடசாலை அணி அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது.
கொழும்பு சுகததாச மைதானத்தில் கடந்த ஞாயிறன்று (24) நடைபெற்ற காலிறுதிப் போட்டியில் யாழ்ப்பாணம் புனித ஹென்ரிஸ் அணியை எதிர்கொண்ட அலிகார் அணி 5–0 என்ற கோல் கணக்கில் வெற்றியீட்டியது. இலங்கை பாடசாலைகள் கால்பந்து சம்மேளனம் இந்தப் போட்டியை நடத்துகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஏறாவூர் சுழற்சி நிருபர்