Home » யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்டதற்கு நீதி கோரி போராட்டம்

யாழில் சிறுமியின் கை அகற்றப்பட்டதற்கு நீதி கோரி போராட்டம்

- ஜனாதிபதிக்கு மகஜர் அனுப்ப கையெழுத்தும் சேகரிப்பு

by Prashahini
September 7, 2023 12:29 pm 0 comment

யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் காய்ச்சலுக்காகச் சேர்க்கப்பட்ட 8 வயதுச் சிறுமியின் இடது கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்ட சம்பவத்திற்கு நீதி வேண்டி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு முன்பாக இன்று (07) காலை 9.30 மணியளவில் ஒன்று கூடியவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சம்பந்தப்பட்ட தாதியை பணி நீக்கம் செய், பணிப்பாளரே விசாரணைகளை மூடி மறைக்காதே உள்ளிட்ட கோஷங்கள் இதன்போது எழுப்பபட்டது.

அதேவேளை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு மகஜரொன்றை கையளிப்பதற்கு பொதுமக்களிடம் கையெழுத்து சேகரிப்பும் இடம்பெற்றது.

யாழ். விசேட நிருபர்

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT