Tuesday, May 21, 2024
Home » மோட்டார் சைக்கிள் விபத்தில் தாயும், 8 வயது மகளும் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் தாயும், 8 வயது மகளும் பலி

by Prashahini
August 21, 2023 3:07 pm 0 comment

அநுராதபுரம், ஜெயந்தி மாவத்தையில் உள்ள கதிரேசன் கோவிலுக்கு முன்பாக இன்று (21) இடம்பெற்ற வாகன விபத்தில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக அநுராதபுரம் தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

குறித்த இவ்விபத்தில் 36 வயதான சஷிகா துலானி வீரசிங்க மற்றும் அவரது 8 வயது மகளான திசானி பிரியன்ஷா ஆகியோரே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவர்கள் இருவரும் பயணித்த மோட்டார் சைக்கிள், அதே திசையில் வந்த டிப்பர் வாகனம் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பில் 37 வயதுடைய டிப்பர் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.

 

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT