இலங்கை பாடசாலைகள் கால்பந்து சங்கம் நடாத்தும் அகில இலங்கை ரீதியிலான 20 வயதுக்குட்பட்ட முதலாம் பிரிவு பாடசாலைகளுக்கிடையிலான கால்பந்தாட்ட சுற்றுப்போட்டியில் பி குழுவில் இடம்பெற்ற ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரி அணிக்கு எதிரான போட்டியில் கொழும்பு ஸாஹிரா கல்லூரி 1–0 என்ற கோல்கள் கணக்கில் வெற்றிபெற்றது.
மட்டக்களப்பு வெபர் விளையாட்டரங்கில் நேற்று முன்தினம் (19) நடைபெற்ற போட்டியில் வலுவான சாஹிரா கல்லூரிக்கு ஈடுகொடுத்து அலிகார் மத்திய கல்லூரி அணி ஆடியது. முதல் பாதியில் இரு அணிகளும் கோல் புகுத்தாத நிலையில் இரண்டாவது பாதியில் கோணர் கிக் வாய்ப்பை பயன்படுத்தி சாஹிரா கோல் புகுத்தியது.
எதிர்வரும் 22ஆம் திகதி இதே மைதானத்தில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கும், ஏறாவூர் அலிகார் மத்திய கல்லூரிக்குமிடையிலான போட்டி இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அட்டாளைச்சேனை விசேட நிருபர்