Tuesday, May 14, 2024
Home » அதிகளவு ஹெரோயின் நுகர்ந்த இளைஞன் உயிரிழப்பு

அதிகளவு ஹெரோயின் நுகர்ந்த இளைஞன் உயிரிழப்பு

by Prashahini
August 4, 2023 3:18 pm 0 comment

யாழ்ப்பாணத்தில் ஹெரோயின் போதைப்பொருளை அதிகளவில் நுகர்ந்த குருநாகல் பகுதியை சேர்ந்த 27 வயதுடைய இளைஞன் ஒருவர் நேற்று (03) உயிரிழந்துள்ளார்.

குறித்த இளைஞன் , யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து மின் சாதன பொருட்களை விற்பனை செய்து வந்தவர் எனவும் , நேற்றைய தினம் கல்வியங்காட்டு பகுதியில் மயங்கி விழுந்த நிலையில் சிகிச்சைக்காக யாழ்.போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்துள்ளார் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

இளைஞன் அதிகளவில் ஹெரோயின் போதைப்பொருளை நுகர்ந்தமையே உயிரிழப்புக்கான காரணம் எனவும் , மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் , திடீர் மரண விசாரணை அதிகாரி ந. பிரேமகுமார் தெரிவித்தார்.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண பொலிஸாரும் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

யாழ்.விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT