Sunday, May 12, 2024
Home » குளத்தில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

குளத்தில் நீராடிய இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழப்பு

by Prashahini
July 27, 2023 9:47 am 0 comment

மட்டக்களப்பு தாந்தாமலை முருகன் ஆலய வழிபாட்டிற்கு சென்ற இளைஞன் ஒருவர் குளத்தில் நீராடியபோது நீரில் மூழ்கிய நிலையில் வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்த சம்பவம் நேற்று (26) பிற்பகல் 2.00 மணிக்கு இடம்பெற்றுள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர்.

களுவாஞ்சிக்குடி எருவில் காளிகோவில் வீதியைச் சேர்ந்த 19 வயதுடைய மோகனசிங்கம் பிரகதீசன் என்பவரே இவ்வாறு பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார்.

தாந்தாமலை முருகள் ஆலைய வருடாந்த திருவிழா ஆரம்பித்து இடம்பெற்றுவரும் நிலையில் களுவாஞ்சிக்குடி எருவில் பிரதேச மக்களின் திருவிழாவையிட்டு அந்தபகுதி மக்கள் ஆலய வழிபாட்டுக்கு சென்றனர்.

இதன்போது ஆலய வழிபாட்டுக்கு சென்ற குறித்த இளைஞனும் அவரது நண்பர்களுமாக தாந்தாமலை குளத்தில் நீராடிய போது குறித்த இளைஞன் நீரிழ் முழுகியதையடுத்து அவரை நண்பர்கள் காப்பாற்றி மகிழடித்தீவு வைத்தியசாலையில் அனுமதித்ததோடு, மேலதிக சிகிச்சைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற நிலையில் குறித்த இளைஞன் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் சடலம் மட்டு போதனா வைத்தியசாலை பிரேத அறையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொக்கட்டிச்சோலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

வெல்லாவெளி தினகரன் நிருபர்- க.விஜயரெத்தினம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT