Monday, May 20, 2024
Home » மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும், மகனும் பலி

மோட்டார் சைக்கிள் விபத்தில் தந்தையும், மகனும் பலி

by Prashahini
July 20, 2023 2:22 pm 0 comment

அனுராதபுரம் – மதவாச்சி வீதியில் மதவாச்சி பிரதேசத்தில் இடம்பெற்ற வாகன விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த தந்தையும், மகனும் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்து சம்பவம் நேற்று (19) இரவு 8 மணியளவில் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் உயிரிழந்த இருவரும் திருகோணமலை பிரதேசத்தை சேர்ந்த தந்தையும், மகனுமாவர். இவர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி மரமொன்றுடன் மோதி விபத்துக்குள்ளானது. இதில் மோட்டார் சைக்கிளை செலுத்தி சென்ற 22 வயதுடைய ஏ.சில்வெஸ்டர் என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததுடன், 48 வயதுடைய வி. அன்ரனிதாஸ் என்ற தந்தை பலத்த காயங்களுக்குள்ளாகி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் உயிரிழந்துள்ளார்.

மேலும் இவ்விபத்து சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை மதவாச்சி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

கல்நேவ தினகரன் விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT