919
பருத்தித்துறை கடலில் இருந்து இன்று (17) காலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலம் இனங்காணப்பட்டமை தொடர்பில் பருத்தித்துறை பொலிஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதனை அடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற பருத்தித்துறை நீதவான் நீதிமன்ற நீதிவான் கிருசாந்தன் பொன்னுத்துரை சடலத்தை பார்வையிட்டதுடன், அடையாளம் காணும் பொருட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சடலத்தை ஒப்படைக்குமாறு பொலிசாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
நாகர்கோவில் விஷேட நிருபர்