911
இணைய விளையாட்டுக்கு அடிமையாகி அதனால் ஏற்பட்ட மனவிரக்தியினால் பல்கலைக்கழக மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணம் வண்ணார் பண்ணையைச் சேர்ந்த 22 வயதுடைய கிளிநொச்சி அறிவியல்நகர் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் மாணவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
நேற்றைய தினம் (16) தாயும், தந்தையும் தொழிலுக்காக வீட்டில் இருந்து புறப்பட்டுச் சென்று முற்பகல் 11 மணியளவில் தந்தை வீடு திரும்பியுள்ளார்.
இதன்போது மகன் தற்கொலை செய்துக் கொண்ட நிலையில் இருந்ததை தந்தை பார்த்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற் கொண்டு வருகின்றனர்.