Sunday, May 19, 2024
Home » விசுவமடுவில் சேவைநிலையத்தை திறந்து வைத்துள்ள மக்கள் வங்கி

விசுவமடுவில் சேவைநிலையத்தை திறந்து வைத்துள்ள மக்கள் வங்கி

by admin
July 10, 2023 1:52 pm 0 comment

மக்கள் வங்கி தனது புதிய சேவை மையத்தை விசுவமடு நகரில் அண்மையில் திறந்து வைத்துள்ளது.பண மீள்சுழற்சி இயந்திரம் (CRM) உள்ளிட்ட நவீன டிஜிட்டல் வங்கிச் சேவைகளை இச்சேவை மையம் வழங்குகிறது.

இந்நிலையம் வருடத்தில் 365 தினங்களும், நாளில் 24 மணி நேரமும் பணம் மீளப்பெறுதல், வைப்புக்கள் மற்றும் கட்டணப் பட்டியல் கொடுப்பனவு செலுத்துதல் ஆகியவற்றுக்கு இடமளிக்கின்றது.

மக்கள் வங்கியின் பிரதிப் பொதுமுகாமையாளர் (மார்க்க முகாமைத்துவம்) ரி.எம்.டபிள்யூ. சந்திரகுமார, வன்னி பிராந்திய முகாமையாளர் ஏ. ஜயசித், தர்மபுரம் மத்திய கல்லூரியின் அதிபர் திருமதி கந்தசாமி இந்தேகாந்தி, மக்கள் வங்கியின் வன்னிப் பிராந்திய உதவி பிராந்திய முகாமையாளர்கள் எஸ்.பி.சூரியகுமாரன், எஸ்.வி.ஜி.ஜே.செல்லையா, பரந்தன் கிளை முகாமையாளர் எம்.ஏ.பிரான்சிஸ், விசுவமடு சேவை நிலைய முகாமையாளர் ஜி.ஜெயகணேசன் மற்றும் அரச உத்தியோகத்தர்கள், வங்கி ஊழியர்கள், வாடிக்கையாளர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT