திருகோணமலை வை.எம்.எம்.ஏயினால் நடாத்தப்பட்ட சுதந்திர கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியில் டிபேண்ட் ஜமாலியா அணி வெற்றிபெற்றது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு 17 வயதுக்கு உட்பட்ட வீரர்களுக்கு இடையே நடைபெற்ற இந்த போட்டியில் ஏழு அணிகள் பங்கேற்றன.
இலங்கை வை.எம்.எம்.ஏ. பேரவையின் திருகோணமலை மாவட்டப் பணிப்பாளர் எம்.எம்.எம். முக்தார் தலைமையில் ஜமாலியா பாடசாலை விளையாட்டு மைதானத்தில் கடந்த செவ்வாயன்று (06) நடைபெற்றது இறுதிப் போட்டியில் ஸ்பேன்சஸ் ஜமாலியா அணியை டிபேண்ட் ஜமாலியா அணி 3–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தியது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக வன்னி ஹோப் ஸ்ரீ லங்கா நிறுவனத்தின் இலங்கைக்கான பணிப்பாளர் எம்.ரீ.எம். பறாஸ் கலந்து கொண்டார்.
(ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்)