பொரளை ஜும்ஆப் பள்ளிவாசலில் அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட நல்லிணக்க சகவாழ்வு மையம் பள்ளிவாசல் தலைவர் அல்ஹாஜ் எம்.ஆர்.எம். அவ்தாத் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது. கடந்த வியாழக்கிழமை மேற்படி பள்ளிவாசலில் நிடா மற்றும் பொரளை நல்லிணக்க சகவாழ்வு மையம் இணைந்து நடத்திய முஸ்லிம்கள் எப்படி இஸ்லாம் மார்க்கத்தை கற்கிறார்கள் மற்றும் பள்ளியில் எப்படி ஐந்து வேலைத் தொழுகை நடத்துகிறார்கள் என்பதை பற்றிய தெளிவுரை ஒன்று பள்ளிவாசல் செயலாளர் அல்ஹாஜ் எம்.எஸ்.எம். இர்பான் ஏற்பாடு செய்திருந்த நிகழ்வில் கலந்துகொண்ட இந்துமத குருபீடத்தை சேர்ந்த ஐக்கிய இலங்கை ஸ்ரீ ஜெய் ப்ரத்யங்கிரா குரு பீடத்தின் தலைவர் எஸ்.
விநாயகர் தலைமையின் கீழ் கலந்துகொண்டகுரு பீடாதிபதிகள் மத்ரஸா மாணவர்கள் குர்ஆன் கற்றுக்கொள்கின்ற முறை, ஐந்து வேலை தொழுகை நடைபெறுகின்ற முறை, எப்படி முஸ்லிம் ஜனாஸாக்கள் நல்லாடக்கம் செய்வது பற்றி பள்ளிவாசல் மௌலவி எம். பாரூக் தெளிவுபடுத்துவதையும் நிகழ்வில் கலந்துகொண்டவர்களையும் படத்தில் காணலாம்.
படப்பிடிப்பு- : லியாகத் அலிகான்