யாழ்ப்பாணத்தில் இலங்கையின் 76ஆவது சுதந்திர தினம் இன்று (04) வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது.
பொதுமக்கள், சிவில் அமைப்புகள் இணைந்து, 76ஆவது தேசிய சுதந்திர தினத்தை வெகு விமரிசையாக கொண்டாடியுள்ளன.
இதில் சர்வமத தலைவர்கள் மற்றும் கலை, கலாசார, நடனக் குழுக்கள் கலந்து கொண்டனர். மத நல்லிணக்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் பேரணியும் இடம்பெற்றது.
இந்த சுதந்திர தின விழாவில் சுமார் 3,000 பொதுமக்கள் கலந்து கொண்டமை விசேட அம்சமாகும்.
வீரசிங்கம் மண்டபத்தில் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றது.
76ஆவது சுதந்திர தினத்தை மையப்படுத்தி, தேசியக் கொடிகளுடனான பட்டங்களும் இதன் போது பறக்கவிடப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.
கிழக்கில் ஆளுநர் செந்தில் தலைமையில் பிரமாண்ட சுதந்திரதின நிகழ்வுகள்
ஜனாதிபதி தலைமையில் இடம்பெற்ற 76 ஆவது தேசிய சுதந்திர தின விழா