122
ஒரு இறாத்தல் பாண் மற்றும் அரை இறாத்தல் பாணின் நிர்ணயிக்கப்பட்ட நிறையை குறிப்பிடும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் விவகார அதிகார சபையால் நேற்று வெளியிடப்பட்டது.
இதற்கமைய ஒரு இறாத்தல் பாணின் நிர்ணயிக்கப்பட்ட நிறை 450 கிராமாக இருக்க வேண்டுமென்பதுடன், அது 13.5 கிராமுக்கு குறையாமல் இருக்க
வேண்டும். இதேவேளை அரை இறாத்தல் பாணின் நிர்ணயிக்கப்பட்ட நிறை 225 கிராமாக இருக்க வேண்டுமெனவும் வர்த்தமானி அறிவித்தலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், விற்பனைக்கு வைக்கப்படும் பாணின் நிறை தௌிவாக இருக்கும் வகையில் காட்சிப்படுத்தப்பட வேண்டுமெனவும் வர்த்தகர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.