166
வரலாற்றில் சுங்கத்துறை கடந்த ஆண்டில் அதிக வருவாயை ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. இதன்படி 970 பில்லியன் ரூபா வருமானமாக ஈட்டப்பட்டதாக இலங்கை சுங்கம் தெரிவித்துள்ளது.
முன்னதாக 2018ஆம் ஆண்டில் ஈட்டப்பட்ட 923 பில்லியன் ரூபா வருமானமே, இதுவரையில் இலங்கை சுங்கத்தின் வரலாற்றில் ஈட்டபட்ட அதிக வருமானமாக பதிவாகியிருந்தது.
இலங்கை சுங்கத்துக்கு நிதி அமைச்சு, கடந்த வருடத்துக்கான வருமான இலக்காக ஆயிரத்து 217 பில்லியன் ரூபாவை நிர்ணயித்திருந்தது. எவ்வாறாயினும் இறக்குமதி கட்டுப்பாடுகளை கருத்திற்கொண்டு அந்த இலக்கை 893 பில்லியன் ரூபாவாக திருத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.