பரீட்சை சான்றிதழ்களை போலியாக அச்சிட்டு விநியோகித்து வந்த சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அத்துடன் இவற்றை தயாரிக்கப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களும் பொலிஸாரால் நேற்று (28) மீட்கப்பட்டுள்ளன.
மேற்படி காரியாலயம் கேகாலை சுதந்திர மாவத்தையில் இயங்குவதாக கிடைத்த தகவலையடுத்துப் பொலிஸார் இந்நிறுவனத்தின் தரகர் ஒருவரை அணுகி அவர் மூலம் இந்த சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பில் தகவல்களை பெற்று இக்காரியாலயத்தை முற்றுகையிட்டுள்ளனர்.
இங்கு க.பொ.த. சாதாரண மற்றும் உயர்தர சான்றிதழ்கள் போலியாக அச்சிடப்பட்டு விற்பனை செய்து வந்துள்ளதுடன் ஒரு போலிச் சான்றிதளுக்காக ரூ.35,000 முதல் ரூ.40,000 வரை அறவிடப்பட்டு வந்துள்ளதாகவும் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.
இரத்தினபுரி சுழற்சி நிருபர்