தெற்கு இஸ்ரேலிய நகரான ஈலட்டில் உள்ள பாடசாலை மீது ஆளில்லா விமானத் தாக்குதல் நடத்திய சிரியாவில் உள்ள குழு ஒன்றின் மீது பதில் தாக்குதல் நடத்தியதாக இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இந்த ஆளில்லா விமானத் தாக்குதல் கடந்த வியாழக்கிழமை நண்பகலில் ட்செலிம் ஆரம்ப பாடசாலைக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. இதில் எவருக்கு பாதிப்பு ஏற்படவில்லை என்றும் ஏழு பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் இஸ்ரேல் இராணுவம் தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்தே சிரியாவில் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதோடு, எந்த குழு இலக்கு வைக்கப்பட்டது என்பது பற்றி இஸ்ரேல் கூறவில்லை.
எனினும் காசாவில் போர் வெடித்தது தொடக்கம் பிராந்தியத்தில் இஸ்ரேலை இலக்கு வைத்து இடம்பெறும் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. யெமனின் ஹூத்தி கிளர்ச்சியாளர்கள், லெபனானின் ஹிஸ்புல்லா அமைப்பு மற்றும் சிரியாவில் ஈரான் ஆதரவு அமைப்புகள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி வருகின்றன.
தவிர, ஹமாம் மற்றும் பலஸ்தீன போராளிகளும் இஸ்ரேல் மீது தொடர்ந்து ரொக்கெட் தாக்குதல்களை நடத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.