281
டயலொக் அனுசரணையில் கொழும்பில் நடைபெற்ற மத்திய ஆசிய ஆடவர் கரப்பந்தாட்ட சவால் கிண்ணத்தை இலங்கை அணி கைப்பற்றியது.
சுகததாச அரங்கில் நேற்று முன்தினம் (15) நடைபெற்ற இறுதிப் போட்டியில் உஸ்பகிஸ்தான் அணியை எதிர்கொண்ட இலங்கை தேசிய கரப்பந்தாட்ட அணி போட்டியை 3–0 வென்று சம்பியன் கிண்ணத்தை கைப்பற்றியது. இதன்போது இலங்கை அணி 25–14, 25–18 மற்றும் 25–22 என்ற புள்ளிகள் கணக்கிலேயே வெற்றிபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதில் சவூதி அரேபியாவை தோற்கடித்து ஆப்கானிஸ்தான் மூன்றாவது இடத்தைப் பிடித்தது. மஹேல இன்தீவர பண்டார தொடரின் சிறந்த வீரராக தெரிவானார்.