262
நீதி, சிறைச்சாலைகள் விவகார மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜேயதாச ராஜபக்சவினால் நியமிக்கப்பட்டுள்ள புதிய சமாதான நீதவான்கள் 692 பேரின் பெயர்ப் பட்டியல் இன்று 13ஆம் திகதி வெளியாகும் வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டுள்ளது.
இந்த பெயர்ப் பட்டியலுடனான வர்த்தமானி நாளை மறுதினம் 15ஆம் திகதி வெளிவரவுள்ள தினகரன் வாரமஞ்சரி பத்திரிகையுடன் இலவச இணைப்பாக விநியோகிக்கப்படவுள்ளது. அதனைத் தவிர இலங்கை கடற்படையில் புதிய படை வீரர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்பமும் இம்முறை வர்த்தமானியில் வெளிவருகின்றது.