பொலிஸ் உத்தியோகத்தரெனக் கூறி, மாணிக்கக் கல்லை கொள்ளையிட்ட சந்தேகத்தில் பிரதான நபரை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் (23) கைது செய்துள்ளனர்.
பக்கமூன பிரதேசத்தை சேர்ந்த 47 வயதுடைய நபரே, இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கட்டுகஸ்தோட்டை பிரதேசத்தில் கடந்த (17) இச்சந்தேக நபர் மேலும் பலருடன் இணைந்து இக் கொள்ளைக்கு திட்டமிட்டமை தெரிய வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கொள்ளையிடப்பட்ட மாணிக்கக்கல் சுமார் 12 இலட்சம் ரூபா பெறுமதியான நீல நிறக்கல் என தெரிவிக்கப்படுகிறது. மாணிக்கக்கல்லை வாங்க விரும்புவதாக கூறிய சந்தேக நபர், தொலைபேசியில் அழைப்பு விடுத்து, தனது சகா ஒருவருடன் காரில் சென்று மாணிக்கக் கல்லை பரிசோதித்துக் கொண்டிருந்தார்.
அப்போது, மோட்டார் சைக்கிளில் பொலிஸ் அதிகாரி போல் வேடமணிந்து வந்த மற்றுமொரு சந்தேக நபர், மாணிக்கக்கல் உரிமையாளரை அச்சுறுத்தி கொள்ளையிட்டுச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.