109
இறக்காமம் பிரதேச சபை ஏற்பாடு செய்து நடத்திய தேசிய வாசிப்பு மாத போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கான பரிசளிப்பு விழா, இறக்காமம் அஸ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் அண்மையில் நடைபெற்றது.
இறக்காமம் பிரதேச சபைச் செயலாளர் ஏ.எம்.இல்யாஸ் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் நூலகர் எம்.எம்.முனவ்வர் உட்பட நூலக உதவியாளர்கள், பிரதேச சபை உத்தியோகத்தர்கள், மாணவர்கள், பெற்றோர் எனப் பலர் கலந்து கொண்டனர். போட்டிகளில் பங்குபற்றி வெற்றியீட்டிய மாணவர்களுக்கு பரிசில்களும் சான்றிதழ்களும் இதன்போது வழங்கி வைக்கப்பட்டதுடன், போட்டிகளில் பங்குபற்றிய மாணவர்கள் அனைவருக்கும் சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டன.
பள்ளிக்குடியிருப்பு நிருபர்