77
கற்பிட்டி – ஏத்தாளை பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்துச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கற்பிட்டி – பாலக்குடா , கரடிப்பானி வத்தையைச் சேர்ந்த தெஹிவலகே ஜானக ஏரங்க கொஸ்தா (வயது 37) எனும் குடும்பஸ்தரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
தலவில பகுதியில் இருந்து நுரைச்சோலை பொருளாதார மத்திய நிலையத்திற்கு மரக்கறிகளை ஏற்றிச் சென்று கொண்டிருந்த லொறியுடன் மோட்டார் சைக்கிள் ஒன்று பின்னால் சென்று மோதியதில் இந்த விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கற்பிட்டி தினகரன் விஷேட நிருபர்