Friday, April 26, 2024
Home » நோய்வாய்ப்பட்ட மீனவரை காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்த கடற்படையினர்

நோய்வாய்ப்பட்ட மீனவரை காப்பாற்றி கரைக்கு அழைத்து வந்த கடற்படையினர்

by Rizwan Segu Mohideen
December 14, 2023 11:20 am 0 comment

திருகோணமலை பவுல் முனை கடற்பகுதியில் திடீர் சுகவீனமுற்ற இலங்கை பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்த மீனவர் ஒருவரை உடனடியாக கரைக்குக் கொண்டுவந்து சிகிச்சைக்காக அனுப்பி வைக்க இலங்கை கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

நேற்றையதினம் (13) இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

கடந்த டிசம்பர் 05ஆம் திகதி தெவுந்தர மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்ட குறித்த பல நாள் மீன்பிடிப் படகில் பயணித்த மீனவர் ஒருவர் திருகோணமலை, பவுல் முனை கடற்பரப்பில் வைத்து திடீரென சுகவீனமடைந்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்திற்கு அம்மீனவர்கள் இதனை அறிவித்திருந்த நிலையில், திணைக்களம் அத்தகவலை இலங்கை கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு அறிவித்திருந்தது.

அதற்கமைய செயற்பட்ட கடற்படையினர், குறித்த மீனவரை கரைக்கு கொண்டு வந்து, திருகோணமலை பொது வைத்தியசாலையயில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT