திருகோணமலை பவுல் முனை கடற்பகுதியில் திடீர் சுகவீனமுற்ற இலங்கை பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்த மீனவர் ஒருவரை உடனடியாக கரைக்குக் கொண்டுவந்து சிகிச்சைக்காக அனுப்பி வைக்க இலங்கை கடற்படையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
நேற்றையதினம் (13) இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கடந்த டிசம்பர் 05ஆம் திகதி தெவுந்தர மீன்பிடித் துறைமுகத்தில் இருந்து மீன்பிடி நடவடிக்கைகளுக்காகப் புறப்பட்ட குறித்த பல நாள் மீன்பிடிப் படகில் பயணித்த மீனவர் ஒருவர் திருகோணமலை, பவுல் முனை கடற்பரப்பில் வைத்து திடீரென சுகவீனமடைந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களத்திற்கு அம்மீனவர்கள் இதனை அறிவித்திருந்த நிலையில், திணைக்களம் அத்தகவலை இலங்கை கடற்படைத் தலைமையகத்தில் உள்ள கொழும்பு கடல்சார் தேடுதல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு நிலையத்திற்கு அறிவித்திருந்தது.
அதற்கமைய செயற்பட்ட கடற்படையினர், குறித்த மீனவரை கரைக்கு கொண்டு வந்து, திருகோணமலை பொது வைத்தியசாலையயில் அனுமதிக்க நடவடிக்கை எடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.