முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) நாலக டி சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய சில பிரமுகர்களை கொல்ல சதி செய்ததாக 2019 இல் அவர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்தே அவர் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
அவரை குறித்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டுள்ளது.
குறித்த வழக்கு தொடர்பில் நாலக சில்வாவுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இல்லை என சட்ட மா அதிபர் நீதிமன்றில் இன்று அறிவித்ததைத் தொடர்ந்து, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபரான நாலக டி சில்வாவை குறித்த வழக்கிலிருந்து விடுதலை செய்யும் உத்தரவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கியுள்ளது.