Friday, April 26, 2024
Home » பிரமுகர்கள் கொலைச் சதி வழக்கு; முன்னாள் DIG நாலக டி சில்வா விடுதலை

பிரமுகர்கள் கொலைச் சதி வழக்கு; முன்னாள் DIG நாலக டி சில்வா விடுதலை

- போதிய சாட்சியம் இல்லை என AG தெரிவிப்பு

by Rizwan Segu Mohideen
December 6, 2023 2:24 pm 0 comment

முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் (DIG) நாலக டி சில்வாவுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து அவர் விடுவிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்ட முக்கிய சில பிரமுகர்களை கொல்ல சதி செய்ததாக 2019 இல் அவர் மீது தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்தே அவர் இவ்வாறு விடுதலை செய்யப்பட்டுள்ளார்.

அவரை குறித்த வழக்கிலிருந்து விடுவிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (06) உத்தரவிட்டுள்ளது.

குறித்த வழக்கு தொடர்பில் நாலக சில்வாவுக்கு எதிராக போதிய சாட்சியங்கள் இல்லை என சட்ட மா அதிபர் நீதிமன்றில் இன்று அறிவித்ததைத் தொடர்ந்து, முன்னாள் பிரதி பொலிஸ் மா அதிபரான நாலக டி சில்வாவை குறித்த வழக்கிலிருந்து விடுதலை செய்யும் உத்தரவை கொழும்பு நீதவான் நீதிமன்றம் வழங்கியுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT