வெல்லம்பிட்டி பாடசாலையில் இடம்பெற்ற விபத்து தொடர்பில் விசாரணைகளை ஆரம்பிக்குமாறு கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த உரிய அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இப்பாடசாலையில், நீர்க்குழாய் பொருத்தப்பட்டிருந்த மதிற்சுவர் இடிந்து விழுந்ததில் ஒரு மாணவி பலியானதுடன், ஐந்து மாணவர்கள் காயமடைந்துள்ளனர்.
இச்சம்பவம் தொடர்பில் உடனடியாக ஆராய்ந்து, விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அமைச்சர் பணிப்புரை விடுத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் பாடசாலைக்குச் சென்று விசாரணைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜயவர்தனபுர வலயக் கல்விப் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
நேற்று முன்தினம் அங்கு ஏற்பட்ட அமைதியின்மையால், பாடசாலையின் கல்வி நடவடிக்கைகளும் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டுள்ளன. எதிர்வரும் திங்கட்கிழமை மீண்டும் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
சம்பவத்தின் பின்னர் பெற்றோர் மற்றும் பிரதேசவாசிகள் இணைந்து பாடசாலையின் அதிபர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர்.இதையடுத்து, அதிபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.