விளையாட்டு அமைச்சு மற்றும் நெஸ்லே லங்கா நிறுவனத்தின் நெஸ்டமோல்ட் இணைந்து காலியில் நடத்திய அகில இலங்கை பாடசாலை அரை மரதன் ஒட்டப்போட்டியின் 5 கி.மீ. ஓட்டத்தின் ஆடவர் பிரிவில் கமிது மதுஷான் மற்றும் மகளிர் பிரிவில் கே.வை. சமிந்தி ஆகியோர் வெற்றியீட்டினர்.
கடந்த சனிக்கிழமை (11) நடைபெற்ற இந்தப் போட்டியில் 14.58 நிமிடங்களில் போட்டித் தூரத்தை நிறைவு செய்தே கம்புராவல தேசிய பாடசாலையைச் சேர்ந்த மதுஷான் முதலிடத்தை வென்றார். பெண்கள் பிரிவில் முதலிடத்தை பெற்ற மாகதுர மத்திய கல்லூரியின் சமிந்து போட்டித் தூரத்தை 18.51 நிமிடங்களில் நிறைவு செய்தார்.
இந்த அரை மரதன் போட்டிகளில் 300க்கும் அதிகமான வீர, வீராங்கனைகள் பங்கேற்றிருந்தனர். இந்த மரதன் போட்டியின் பரிசளிப்பு நிகழ்வில் தென் மாகாண ஆளுநர் விலி கமகே, நெஸ்லே லங்கா பிரதித் தலைவர் பந்துல எகொடகே உட்பட பிரமுகர்கள் பங்கேற்றிருந்தனர்.