வட மாகாணத்தில் உள்ள சிறந்த விளையாட்டு வீரர்களை உள்ளடக்கிய 40 வயதுக்கு மேற்பட்டவர்களுக்காக இடம்பெற்ற டி20 கிரிக்கெட் சுற்று போட்டியில் தோல்வியுறாத அணியாக மன்னார் AA சுப்பர் கிங்ஸ் அணி சம்பியன் கிண்ணத்தை வென்றது. கடந்த ஞாயிறன்று யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் கிளிநொச்சி புல்ஸ் அணியை எதிர்கொண்ட சுப்பர் கிங்ஸ் நிர்ணயித்த 131 ஓட்ட வெற்றி இலக்கை 17.3 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து எட்டியது. இறுதிப்போட்டியின் ஆட்ட நாயகனாக 58 ஓட்டங்களை பெற்ற சட்டத்தரணி இளங்குமரன் தெரிவுசெய்யப்பட்டார். இந்தத் தொடரில் சிறந்த பந்துவீச்சாளராக பர்னாந்து அருள் மற்றும் துடுப்பாட்ட வீரராக சட்டத்தரணி மணிவண்ணன் தெரிவாகினர்.
மன்னார் குறூப் நிருபர்