பாகிஸ்தான் நாட்டின் இலங்கைக்கான உயர்ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் உமர் பாறூக் புர்கி பசறிச்சேனை பிரதேசத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்ததுடன் அங்கு பல்வேறு நிகழ்வுகளிலும் கலந்து சிறப்பித்தார்.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம். முஷாரப் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வுகளில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் நிதி ஒதுக்கீட்டில் கொள்வனவு செய்யப்பட்ட கதிரை, மேசைகள் பசறிச்சேனைஅல்-இஷ்ராக் மகா வித்தியாலயத்திற்கு வழங்கி வைக்கப்பட்டதுடன், 10 கிரிக்கட் விளையாட்டுக் கழகங்களுக்கான கடின பந்து உபகரணங்கள் மற்றும் 100 குடும்பங்களுக்கான உலர் உணவுப் பொதிகளும் இதன்போது பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர் உமர் பாறூக் புர்கியினால் வழங்கி வைக்கப்பட்டன.
பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எஸ்.எம்.எம்.முஷாரப் விடுத்த வேண்டுகோளின் பேரில் பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தின் நிதியுதவியின் மூலம் அல்-இஷ்ராக் வித்தியாலயத்தில், தெரிவு செய்யப்பட்ட சிங்கபுர, பசறிச்சேனை பிரதேசங்களைச் சேர்ந்த குடும்பங்களுக்கு தளபாடங்களும், பொருட்களும் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
மேலும் மிகவும் வறுமைக்கோட்டின் கீழ் வாழ்கின்ற மக்களை சந்தித்து அவர்களது தேவைகளையும் உயர்ஸ்தானிகர் கேட்டறிந்து கொண்டார்.
(அட்டாளைச்சேனை விசேட நிருபர்)