329
பொலன்னறுவை, ஹிங்குராங்கொடை ஆனந்தா மகளிர் கல்லூரியின், 71 வருட பழமைவாய்ந்த சுகலா தேவி மண்டபம் மற்றும் ஒரு பழைய வகுப்பறை கட்டடம் பிரதான நிர்வாக கட்டடமாக புதுப்பிக்கப்பட்டு விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவினால் பாடசாலையின் பாவனைக்காக கையளிக்கப்ட்டுள்ளது.
ஹிங்குராங்கொடை விமானப்படைத்தளத்தினால் மேற்கொள்ளப்படும் சமூக சேவை பணிகளில் ஒன்றாக இப்பணி முன்னெடுக்கப்பட்டுள்ளது.
விமானப்படை தளபதியின் பணிப்புரைக்கு இணங்க ஹிங்குராங்கொடை விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி குறூப் கேப்டன் குணவர்தனவின் மேற்பார்வையின்கீழ் 10 வாரங்களுக்குள் இந்த வேலைத்திட்டம் வெற்றிகரமாக நிறைவேற்றபட்டது.