175
இலங்கைக்கு நாடு கடத்தப்படுவதை தவிர்ப்பதற்காக ஹரக்கட்டா தனக்கு 700 மில்லியன் வழங்க முன்வந்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். காலியில் இடம்பெற்ற நிகழ்விலே, அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் பதவியிலிருந்து தன்னை நீக்குவதற்காக சிரேஸ்ட அதிகாரிகளுக்கு பெருந்தொகை பணத்தை வழங்க பாதாள உலக குழுவினர் தயாராக உள்ளனர்.
ஜனாதிபதிக்கு இந்த விடயம் தெரியும். தனக்கு இலஞ்சம் வழங்க முன்வந்தவர் கொல்லப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.