Monday, May 20, 2024
Home » தென்றல் எப்.எம். “மதுர கீதங்கள்” இசை நிகழ்ச்சி கொழும்பில்

தென்றல் எப்.எம். “மதுர கீதங்கள்” இசை நிகழ்ச்சி கொழும்பில்

பிரதம அதிதியாக பொலிஸ் மாஅதிபர் பங்கேற்பு

by Gayan Abeykoon
May 10, 2024 7:09 am 0 comment

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் தென்றல் எப். எம். வழங்கும் 14 ஆவது “மதுர கீதங்கள்” விஷேட இசை நிகழ்ச்சி எதிர்வரும் 18ஆம் திகதி சனிக்கிழமை  மாலை 6.30 மணிக்கு ஆனந்த சமரக்கோன் கலையகத்தில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் கலந்து சிறப்பிக்கவுள்ளார். ரட்ணம் ரட்ணதுரை இசைக்குழுவினரின் இசையில் புதிய இடைக்கால, பழைய பாடல்கள் இடம்பெறவுள்ளன. நம் நாட்டின் பிரபல பாடகர், பாடகிகளின் பாடல்கள் இலங்கை வானொலி தென்றல் எப்.எம். அலைவரிசையூடாக நேரலையாக ஒலிபரப்பாகவுள்ளது.

கலாபூஷணம் ஏ. மகேந்திரன் மாஸ்டரின் நெறியாள்கையில் 14ஆவது மதுரகீதங்கள் இடம்பெறுவது குறிப்பிடத்தக்கது. வருகை தருவோருக்கு அனுமதி இலவசமாக வழங்கப்படும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT