கடந்த வருடம் நடைபெற்று முடிந்த க.பொ.த (சாதாரண) தர பெறுபேறுகளின் மீள் திருத்த பெறுபேறுகள் அண்மையில் வெளியாகின. இதன்படி அ / நாச்சியாதீவு முஸ்லிம் மகா வித்தியாலய மாணவி எம்.டி. இப்பத் சனா 09 ஏ சித்திகளை பெற்று பாடசாலைக்கு பெருமை சேர்த்துள்ளார்.
இவர் அநுராதபுரம் சாஹிரா தேசிய பாடசாலையின் பிரதி அதிபர் தில்ஷாத் (நளீமி) மற்றும் அ/ நாச்சியாதீவு முஸ்லிம் மகா வித்தியாலய ஆசிரியை ஏ.எம்.எஸ்.பெளசியா ஆகியோரின் சிரேஷ்ட புதல்வியாவார். இப்பாடசாலையிலிருந்து பரீட்சைக்குத் தோற்றிய மாணவர்களுள் ஏற்கனவே ஒரு மாணவி மாத்திரமே 09 ஏ சித்திகளை பெற்றிருந்த நிலையில், குறிப்பிட்ட இம் மாணவியின் மீள் திருத்த பெறுபேறுகளின் பிரகாரம் இவர் 09 ஏ சித்திகளை பெற்று சாதனை படைத்தார். இவருடன் சேர்த்து இரண்டு மாணவிகள் இம்முறை 09 ஏ சித்திகளைப் பெற்றுள்ளனர்.
இவர்களுக்கும் சித்தியடைந்த ஏனைய மாணவர்களுக்கும் பாடசாலை சமூகம் வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவித்துள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.
திறப்பனை தினகரன் நிருபர்