70
மட்டக்களப்பின் ஏறாவூர் பிரதேசத்தில் இயங்கி வரும் அல் குர்ஆன் மனனமிடும் குல்லிய்யது தாருள் உலூம் அரபுக் கல்லூரிக்கு இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவர் காலித் ஹமூத் அல் கஹ்தானி நேற்று முன்தினம் புதன்கிழமை விஜயம் செய்துள்ளார்.
வடமேல் மாகாண ஆளுநர் ஹாபிஸ் நஸீர் அஹமட்டின் அழைப்பின் பேரிலேயே அவரது இந்த விஜயம் அமைந்துள்ளது. இதன்போது குர்ஆனை மனனம் செய்யும் ஹாபிழ் மாணவர்கள் இன்முகத்துடன் இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரை வரவேற்றுள்ளனர்.
மட்டக்களப்பு குறூப் நிருபர்