69
அம்பாறை மாவட்டத்தில் டென்னிஸ் விளையாட்டரங்கை கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் நேற்று முன்தினம் புதன்கிழமை திறந்து வைத்துள்ளார்.
பொலிஸ் திணைக்களத்தினரின் உதவியுடன் டென்னிஸ் சங்கத்தினரால் பொது மைதானத்தில் டென்னிஸ் விளையாட்டரங்கு உருவாக்கப்பட்டது.
பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னகோன், சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண உள்ளிட்ட பலர் இதற்கான நிகழ்வில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அம்பாறை மாவட்ட மாணவர்கள் டென்னிஸ் விளையாட்டில் தமது திறமையை வளர்த்துக்கொள்ள இதுவொரு சந்தர்ப்பமாக அமைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
காரைதீவு குறூப் நிருபர்