67
கல்முனை கல்வி வலயத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் அடைவு மட்டத்தினை அதிகரிக்கும் நோக்குடன் நடத்தப்பட்ட வலய மட்டத்திலான பரீட்சை தொடர்பாக ஆராயும் மீளாய்வு கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம் தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.
இதில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர் சுஜாதா குலேந்திரகுமார் கலந்துகொண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அடைவு மட்டத்தினை அதிகரிப்பதற்கு கிழக்கு மாகாண மட்டத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள செயற்பாடுகள் தொடர்பாகவும் இவ்விடயம் தொடர்பாக அதிபர்கள், ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாகவும் விளக்கிக் கூறினார்.
துறைநீலாவணை நிருபர்