Monday, May 20, 2024
Home » தரம் -05 புலமைப்பரிசில் பரீட்சை ; அடைவு மட்டத்தை அதிகரிக்க ஏற்பாடு

தரம் -05 புலமைப்பரிசில் பரீட்சை ; அடைவு மட்டத்தை அதிகரிக்க ஏற்பாடு

by Gayan Abeykoon
May 10, 2024 7:19 am 0 comment

கல்முனை கல்வி வலயத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையின் அடைவு மட்டத்தினை அதிகரிக்கும் நோக்குடன் நடத்தப்பட்ட வலய மட்டத்திலான பரீட்சை தொடர்பாக ஆராயும் மீளாய்வு கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ்.சஹுதுல் நஜீம்  தலைமையில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர்  சுஜாதா குலேந்திரகுமார் கலந்துகொண்டு தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான அடைவு மட்டத்தினை அதிகரிப்பதற்கு கிழக்கு மாகாண மட்டத்தில் எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள செயற்பாடுகள் தொடர்பாகவும் இவ்விடயம் தொடர்பாக அதிபர்கள், ஆசிரியர்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் தொடர்பாகவும் விளக்கிக் கூறினார்.

 

துறைநீலாவணை நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT