மறைந்த பேராசிரியர் வித்தியானந்தனின் பிறந்ததினத்தை முன்னிட்டு வித்தியானந்தனின் அருங்காட்சியகம், யாழ்.போதனா வைத்தியசாலையில், பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி மற்றும் மறைந்த பேராசிரியர் வித்தியானந்தனின் குடும்ப உறவினர்களின் தலைமையில் நேற்றுமுன்தினம் திறந்து வைக்கப்பட்டது.
மறைந்த பேராசிரியர் வித்தியானந்தனின் குடும்ப உறவினர்களின் ஏற்பாட்டில் திருவுருவபடம் திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டதுடன் மலர்மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் யாழ்ப்பாண பல்கலைக்கழக கலைப்பீடாதிபதி சி.ரகுராம், யாழ்ப்பாணம் தெல்லிப்பழை துர்க்கா தேவஸ்தான தலைவரும் சிவபூமியின் தலைவருமான ஆறு. திருமுருகன், வாழ்.நாள் பேராசிரியர் சி.சிவலிங்கராஜா, பல்கலைக்கழக விரிவுரையாளர்கள், மறைந்த பேராசிரியர் வித்தியானந்தன் அறக்கட்டளை தலைவர் வி.கமலநாதன் உள்ளிட்ட குடும்ப உறவினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
(யாழ். விசேட நிருபர்)