புலோப்பளை, அறத்திநகர் கடற்றொழிலாளர் சங்கத்தினரின் தொழில் நடவடிக்கைகளுக்காக இறங்குதுறை மற்றும் அதனோடு ெசல்லும் வீதியையும் அமைக்கும் வகையிலான திட்டமொன்றை தயாரிக்குமாறு துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பணிப்புரை வழங்கியுள்ளார்.
முன்னதாக முறையான இறங்குதுறை இல்லாமையால் நாளாந்தம் பல நெருக்கடிகளை எதிர்கொள்ளும் புலோப்பளை, அறத்திநகர் கடற்றொழிலாளர் சங்கத்தினரால் தமக்கான ஓர் இறங்குதுறையை அமைத்து தருமாறு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
குறித்த கோரிக்கையின் பிரகாரம் அப்பகுதிக்கு நேரடி விஜயம் செய்த கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கடற்றொழிலாளர்களுடன் கலந்துரையாடி அவர்களது பிரச்சினைகள் தேவைப்பாடுகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டார்.
இந்நிலையில் இறங்குதுறை மற்றும் அதனோடு குறித்த இடத்திற்கு செல்லும் வீதியையும் கட்டம் கட்டமாக அமைக்கக்கூடிய வகையில் திட்டமொன்றை துரிதமாக தயாரிக்குமாறு துறைசார் தரப்பினருக்கு அமைச்சர் பணிப்புரை வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.