124
நாவலப்பிட்டியை பிறப்பிடமாக கொண்ட உதயசாந்தி நாகலிங்கம் சட்டத்தரணியாக அண்மையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
நாவலப்பிட்டி சொய்சாகலையைச் சேர்ந்த நாகலிங்கம், மலர்செல்வி தம்பதியினரின் புதல்வியான இவர், கதிரேசன் இந்து மகளிர் கல்லூரியில் ஆரம்பக் கல்வியையும் கதிரேசன் மத்திய கல்லூரியில் உயர்தரக் கல்வியையும் கற்றார்.
இளங்கலை சட்டப்படிப்பை லண்டன் பல்கலைக்கழகத்தில் (Bachelor of Law L.L.B. Hons) கற்றார்.
இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டத்தரணியாக சித்தி பெற்றார்.