70
இணுவில் காரைக்காலில் அமைந்துள்ள நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவுகளை சேகரிக்கும் நிலையத்தினால், சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால், அப்பகுதி மக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துள்ளதாகவும் தெரிவித்து அப்பகுதி மக்களால் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
கடந்த நான்கு, ஐந்து வருடங்களுக்கு மேலாக இணுவில் காரைக்கால் சிவன் கோவிலுக்கு அருகாமையிலுள்ள நல்லூர் பிரதேச சபையின் திண்ம கழிவுகளை சேகரிக்கும் நிலையம் அமைந்துள்ளது. அதனை அகற்றுமாறு கோரியே போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.