Sunday, May 19, 2024
Home » மட்டக்களப்பில் மண்டை ஓட்டுடன் எலும்புகள் மீட்பு

மட்டக்களப்பில் மண்டை ஓட்டுடன் எலும்புகள் மீட்பு

by damith
May 6, 2024 7:30 am 0 comment

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் கண்ணகி அம்மன் ஆலையதின் பின்பகுதியிலுள்ள உப்பாற்றில், இனம் தெரியாத ஆண் ஒருவரின் மண்டை ஓடு மற்றும் எலும்புகள் 04ஆம் திகதி மீட்கப்பட்டதாக கொக்குவில் பொலிஸார் தெரிவித்தனர். இந்த ஆற்றில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவரின் வலையில், மண்டை ஓடு மற்றும் இரு எலும்புக் கூடுகள் சிக்கின.

பொலிஸாருக்கு இதுபற்றி தெரிவிக்கப்பட்டு தடயவியல் பிரிவினரும் அழைக்கப்பட்டனர். விசாரணையில் 40 வயதுக்குட்பட்ட ஆண் ஒருவரின் மண்டை ஒடு இதுவென பகுப்பாய்வாளர்கள் தெரிவித்தனர்.

ஏறாவூர் சுற்றுலா நீதிமன்ற மேலதிக நீதவானும், மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவானுமாகிய தர்சினி சம்பவ இடத்துக்குச் சென்று மண்டை ஓட்டை பார்வையிட்டு பிரேத பரிசோதனைக்கு உட்படுத்துமாறு உத்தரவிட்டார்.

இதையடுத்து மீட்கப்பட்ட மண்டை ஓடு, எலும்புகள் என்பன மட்டு, போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக ஒப்படைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொக்குவில் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT