தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை பாக்ஜலசந்தி கடலை பத்து மணித்தியாலம் பத்து நிமிடங்களில் தொடராக நீந்திக்கடந்து சாதனை நிலைநாட்டப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த 12 நீச்சல் வீரர்கள் இச்சாதனையைப் படைத்துள்ளனர்.
இவர்கள் இரு குழுக்களாகப் பிரிந்து தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடி வரை உள்ள சுமார் 30 கிலோ மீற்றர் தூரமுள்ள பாக்ஜலசந்தி கடற்பரப்பை நீந்திக் கடந்தனர். இதற்கான அனுமதி கோரி இவர்கள்,
இந்திய வெளியுறவுதுறை, இலங்கை தூதரகம் மற்றும் பாதுகாப்புதுறை அமைச்சுக்கு அறிவித்திருந்தனர்.அனுமதி கிடைத்ததும் தலைமன்னாரிலிருந்து சனிக்கிழமை காலை 6.30 மணிக்கு இவர்கள் கடலில் குதித்தனர்.
தொடராக ஓட்ட முறையில் நீந்தத் தொடங்கிய 12 பேரும் மாலை 4.40 மணியளவில் (10 மணி நேரம் 10 நிமிடங்களில் நீந்தி) தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியை வந்தடைந்தனர்.