கவிஞர் அஷ்ரஃப் சிஹாப்தீன் எழுதிய சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள் கவிதை நூலின் அறிமுக நிகழ்வு ஞாயிற்றுக் கிழமை (28) தர்கா நகர் ஸாஹிராக் கல்லூரி நளீம் ஹாஜியார் மண்டபத்தில், பேருவளைப் பிராந்திய எழுத்தாளர் ஒன்றியத்தின் பொருளாளர் கவிஞர் தர்கா நகர் ஸபா தலைமையில் நடைபெற்றது. இதன்போது சுவர்களில் உருவாகும் சுவர்க்கங்கள் நூலின் முதல் இரு பிரதிகள் வெளியிட்டு வைக்கப்பட்டன. பிரதிகளை எழுத்தாளர், மொழிபெயர்ப்பாளர், ஓய்வுபெற்ற கல்வி நிர்வாக சேவை உத்தியோகத்தர் ஹாபிஸ் இஸ்ஸதீன் வெளியிட்டுவைக்க, முதற் பிரதியை ரூமி ஹாஷிம் பவுண்டேசன் தலைவர் கலாநிதி ரூமி ஹாஷிம் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில் கலாநிதி ரூமி ஹாஷிம் விசேட உரை நிகழ்த்தியதுடன், ஜாமியா நளீமியா கலாபீட சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி அரபாத் கரீம் சிறப்புரை நிகழ்த்தினார். இலங்கை திறந்த பல்கலைக் கழக வருகைதரு விரிவுரையாளர் திருமதி ஸுமையா ஷரிப்தீன், பஸ்லி ஹமீட் ஆகியோர் நூல் விமர்சனம் செய்தனர்.
பேருவளை விசேட நிருபர்