Home » தொட்டவத்தை அல் பஹ்ரியாவில் மாணவர் பாராட்டு விழா

தொட்டவத்தை அல் பஹ்ரியாவில் மாணவர் பாராட்டு விழா

by Gayan Abeykoon
May 1, 2024 6:24 am 0 comment

பாணந்துறை, தொட்டவத்தை அல் – பஹ்ரியா தேசிய கல்லூரியில் 1992ஆம் ஆண்டு விடுகை மாணவர்களின் ஏற்பாட்டில் அதிபர், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் அபிவிருத்திச் சங்கம் ஆகியவற்றின் அனுசரணையில் நடைபெற்ற தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையில் சாதனை புரிந்த மாணவர்களுக்கான பாராட்டும் பரிசில்கள் வழங்கும் நிகழ்வு (25) பாடசாலை வளாகத்தில் வெகுவிமர்சையாக நடைபெற்றது. இந்நிகழ்வில் கல்லூரியின் முன்னாள் ஆசிரியர்  ஏ. ஜேசுரட்னம் கலந்து சிறப்பித்ததோடு முன்னாள் அதிபர் அல்ஹாஜ் என்.எம் அகமத் யாசீன் மற்றும் முன்னாள் ஆசிரியர்களான அல்ஹாஜ் ஏ.எச்.எச்.எம் முர்தஜா, மௌலவி  ஏ.சீ.எம் மாஹிர், ஜனாபா எஸ்.ஏ பரீனா பிந்து ஆகியோரும் அதிதிகளாகக் கலந்து சிறப்பித்தனர். இதன்போது சுமார் ஐம்பத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பாராட்டி கௌரவிக்கப்பட்டனர்.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT