பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குவது தொடர்பிலான கோரிக்கையை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்துக்கு கொண்டு வரவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர்கள் தீர்வையற்ற வாகன இறக்குமதிக்கு அனுமதி வழங்குமாறு கோரி, சபாநாயகருக்கு கடிதம் அனுப்பி வைத்துள்ளதாக சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கையெழுத்திட்டு இக்கடிதத்தை தமக்கு அனுப்பியுள்ளதாகவும் சபாநாயகர் தெரிவித்துள்ளார்.
இதற்கிணங்கவே, மேற்படி கோரிக்கையை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் கவனத்திற்கு கொண்டு வரவுள்ளதாக சபாநாயகர் மேலும் தெரிவித்துள்ளார்.
லோரன்ஸ் செல்வநாயகம்