80
அம்பாறையின் காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவின் கீழுள்ள வெட்டுவாய்க்கால் பிரதேசத்தில் தொழுநோய் தொடர்பாக நேற்று செவ்வாய்க்கிழமை கள ஆய்வு நடத்தப்பட்டது.
காரைதீவு சுகாதார உணவு அதிகாரி தஸ்லிமா பஷீர் தலைமையிலான சுகாதாரக் குழுவினர் மேற்படி பிரதேசத்திலுள்ள வீடுகளுக்கு சென்று கள ஆய்வு நடத்தினர்.
இந்த கள ஆய்வில் பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள், தொழுநோய் கட்டுப்பாட்டு கள உத்தியோகத்தர்கள் ஆகியோர் பங்குபற்றினர்.
இதன்போது அடையாளம் காணப்பட்ட நான்கு தொழுநோயாளர்களுக்கு உரிய சிகிச்சை வழங்குவதற்கு ஆலோசனையும் வழங்கப்பட்டது.
காரைதீவு குறூப் நிருபர்