74
கிண்ணியா பிரதேச கலைஞர்கள் நால்வருக்கு உதவித் தொகை கிண்ணியா பிரதேச செயலகத்தில் வைத்து நேற்று முன்தினம் திங்கட்கிழமை (29) வழங்கி வைக்கப்பட்டது.
மத்திய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் உதவி அவசியமான கலைஞர்களுக்கு உதவி வழங்கும் திட்டத்தின் கீழ் அத்திணைக்களத்தால் இக்கலைஞர்கள் நால்வரும் தெரிவு செய்யப்பட்டனர்.
வருடா வருடம் கலைஞர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கப்படுவதுடன், இந்த வருடம் மேற்படி கலைஞர்கள் நால்வருக்கு தலா 10,000 ரூபாபடி இந்த உதவித் தொகையை கிண்ணியா பிரதேச செயலாளர் எம்.எச்.எம்.கனி வழங்கி வைத்தார். கவிஞர் அ.கௌரிதாஸன், கவிஞர் ஹஷன், ஓவியர் இஸ்மாயில், இசைக் கலைஞர் முகமட் ஆகியோரே இந்த உதவித் தொகையை பெற்றுக்கொண்டனர்.
கிண்ணியா தினகரன் நிருபர்