எதிர்வரும் மே தின கொண்டாட்டத்தை பொதுஜன பெரமுன தனிப் பெரும் கட்சியாக தனியாக நடத்த ஏற்பாடு செய்துள்ளதாக வனப்பாதுகாப்பு அமைச்சரும் இரத்தினபுரி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான பவித்ரா வன்னியாரச்சி நேற்று தெரிவித்தார். இரத்தினபுரி மாவட்டத்தைச் சேர்ந்த அமைச்சர்கள், இராஜாங்க அமைச்சர்கள், மாகாண சபை முன்னாள் உறுப்பினர்கள், உள்ளூராட்சி மன்றங்களின் முன்னாள் தலைவர்கள், உறுப்பினர்கள், அரசியல் பிரமுகர்கள் பலரும் கலந்துகொண்ட விசேட கூட்டம் அவரது பெல்மதுளை இல்லத்தில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்; 69 இலட்சம் வாக்குக் கட்டமைப்பை கொண்ட பொதுஜன பெரமுன கட்சியின் ஆதரவின்றி இநநாட்டில் எந்த ஒரு அரசாங்கமும் ஆட்சியமைக்க முடியாது. எமது வாக்கு கட்டமைப்பில் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை. எனவே, மே தின கூட்டத்தை நாங்கள் தனித்து வெற்றிகரமாக நடத்திக் காட்டுவோம்.
அடுத்து வரும் ஜனாதிபதி தேர்தலில் எமது கட்சி ஆதரவுடன் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவே தெரிவு செய்யப்படுவார். இது தொடர்பான தீர்மானத்தை மிக விரைவில் அறிவிப்போம் எனவும் அவர் தெரிவித்தார்.
(இரத்தினபுரி சுழற்சி நிருபர்)