60
அரசாங்க மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான 2024ஆம் ஆண்டின் முதலாம் தவணையின் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் இன்று (24) ஆரம்பமாகின்றன.
2024ஆம் ஆண்டில் அரசாங்க மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளில் சிங்கள மற்றும் தமிழ் பாடசாலைகளுக்கான முதலாவது பாடசாலை தவணையின் முதற்கட்டம் இம்மாதம் 10ஆம் திகதி புதன்கிழமையுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது. இதேவேளை 2024ஆம் ஆண்டின் இரண்டாம் பாடசாலை தவணைக் கல்வி நடவடிக்கை மே மாதம் 20ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது